News August 20, 2025
நாகை: கழிவறை அமைக்க ரூ.12,000 மானியம்

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், தூய்மை பாரத இயக்கம் மூலம் தனிநபர் இல்லங்களுக்கு இரு உறிஞ்சு குழி கழிப்பறை கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மானியமாக ரூ.12,000 அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் தங்களது பகுதி வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு நாகை ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 20, 2025
நாகை: கோழி பண்ணை அமைக்க 50% மானியம்

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க!<<17460435>> (2/2)<<>>
News August 20, 2025
நாகை: கோழி பண்ணை அமைக்க 50% மானியம் (2/2)

▶️ இதற்கு தகுதியாக குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்
▶️ மின் இணைப்பு இருக்க வேண்டும்
▶️ ஏற்கனவே நாட்டுக்கோழி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் மற்றும் குடும்பத்தினர் மானியம் பெற தகுதி இல்லை
▶️ தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்குக் குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News August 20, 2025
உயர்வுக்கு படி வழிகாட்டல் முகாம் குறித்த ஆலோசனை கூட்டம்

நாகை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு “உயர்வுக்கு படி ” என்ற உயர் கல்விக்கான வழிகாட்டல் முகாம் நாகை மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், முகாம் தொடர்பான ஆலோசனை கூட்டம், மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி, வேதாரணியம் சார் ஆட்சியர் பங்கேற்றனர்.