News January 5, 2026
நாகை: கட்டையால் தாக்கியதில் பலி

கீழ்வேளூர் ஒன்றியம் ஆதமங்கலம் ஊராட்சி கீரங்குடி பகுதியில் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒரு தரப்பினரை மற்றொரு தரப்பினர் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ரவி (60) உயிரிழந்த நிலையில், கார்த்தி (40) அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக பிரகாஷ், சக்திவேல், சிவபாலன் ஆகிய மூவரை வலிவலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 10, 2026
நாகையில் இன்று வேலை வாய்ப்பு முகாம்

நாகை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (ஜன.10) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் என இருபாலரும் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News January 10, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.9) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.10) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News January 10, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.9) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.10) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


