News November 27, 2025
நாகை: கட்சி தலைவர் மீது குண்டாஸ்

நாகப்பட்டினம் மாவட்டம், விழுந்தமாவடி தென்பாதியைச் சேர்ந்த
புரட்சித்தமிழர் மக்கள் கழக நிறுவனத் தலைவர் ஆனந்தராஜ், திமுக தலைவர்கள் குறித்து அவதூறாக சித்தரித்த விவகாரத்தில் 2 வாரங்களுக்கு முன் கீழையூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் எஸ்பி பரிந்துரையின் பேரில், ஆனந்தராஜ் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Similar News
News November 28, 2025
BREAKING நாகை: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள டிட்வா புயல் காரணமாக நாகை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக நாகை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ.29) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். SHARE NOW!
News November 28, 2025
நாகப்பட்டினம்: வங்கி வேலை அறிவிப்பு!

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20 – 28 வயதுக்குட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது மாதம் ரூ.15,000 சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 28, 2025
நாகை மாவட்டத்தை புரட்டி போட போகும் புயல்..

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது நாகை மாவட்டத்தை ஒட்டிய கடற்பகுதியை கடந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாகை மாவட்டத்தில் இன்றும், நாளையும் (நவ.29) பலத்த சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழை கொட்டித் தீர்க்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


