News January 12, 2026
நாகை: கடலில் குளித்த மாணவன் மாயம்

கர்நாடக மாநிலத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் 50 பேர் வேளாங்கண்ணி வந்துள்ளனர். இவர்களில் 9-ம் வகுப்பு படித்து வரும் நந்தன்(15) மற்றும் நவீன்(26) ஆகிய இருவரும் கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது கடல் அலையில் சிக்கி இருவரும் இழுத்து செல்லப்பட்டுள்ளனர். இதில் நவீன் மீட்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீனவர்கள், கடலில் மாயமான நந்தனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News January 31, 2026
நாகை: திருமண தடையை நீக்கும் அற்புத கோவில்!

நாகை மாவட்டம், திருவாய்மூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வாய்மூர்நாதர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் நீண்ட நாள் திருமணத்தடை உள்ளவர்கள், மூலவரான வாய்மூர்நாதரை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குச் இதை SHARE பண்ணுங்க!
News January 31, 2026
நாகை: ராணுவத்தில் வேலை- APPLY NOW

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க:<
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 31, 2026
நாகை: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

தமிழகத்தில் வரும் பிப்.1-ம் தேதி தைப்பூச விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து சில்லறை மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பா.ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். உத்தரவை மீறி மதுபான கடைகள் திறக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார். SHARE பண்ணுங்க!


