News October 23, 2024
நாகை எஸ்.பி தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம்

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு குறைகள் தொடர்பாக 9 மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க சரக போலீசாருக்கு உத்தரவிட்டார்.
Similar News
News December 29, 2025
நாகை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26,B.26,C.26,D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News December 29, 2025
நாகை: நாய்களுக்கு தடுப்பூசி

கீழ்வேளுர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபத்தில் வெறிநாய் கடித்ததில் 15 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவின் பேரில், பேரூராட்சி பகுதியில் சுற்றி திரியும் நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளில் செயல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
News December 29, 2025
நாகை: பைக் வாங்க அரசு மானியம்!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!\


