News September 3, 2024
நாகை-இலங்கை கப்பலில் பயணிகள் வரத்து அதிகரிப்பு

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் கப்பல் சேவையானது தொடங்கப்பட்டது. ‘சிவகங்கை’ என பெயரிடப்பட்ட இக்கப்பல் வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வேளாங்கண்ணி திருவிழா காரணமாக இலங்கையிலிருந்து நாகை வரும் பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. வரும் 7, 8-ஆகிய தேதிகளில் பயணிகளின் எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News May 8, 2025
நாகை: வனத்துறையில் வேலை!

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள்<
News May 8, 2025
நாகையில் நாளை விவசாயிகள் குறை தீர் கூட்டம்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை கூட்டரங்கில் மே மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
News May 7, 2025
தடைகள் வராமல் இருக்க இங்க போங்க

பாற்கடலை கடையும்போது தடங்கல் ஏற்பட விநாயகரை வணங்காததால் தடங்கல் ஏற்பட்டதாக எண்ணிய தேவர்கள், பாற்கடலில் ஏற்பட்ட நுரையால் விநாயகரை செய்து அதனை வழிபட்டு அமிர்தம் பெற்றனர். நுரையால் செய்யப்பட்ட வெள்ளை விநாயகரை கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலில் வைத்து வழிபட்டனர். இவரை வழி.பட்டால் நினைத்தது நடக்கும் எடுத்த காரியத்தில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.