News September 30, 2025
நாகை: இலங்கையே சேர்ந்த இளம்பெண் கைது

நாகை மாவட்டம், கோடியக்கரை எம்.ஜி.ஆர் நகரில் வசிப்பவர் ஸ்டனிஸ் அனஸ்ட்ராஜ். இவருடைய மனைவி மேரிடென்சியானா(29). இலங்கையை சேர்ந்த இவர் கடந்த 2016-ம் ஆண்டு டூரிஸ்ட் விசாவில் இந்தியா வந்த நிலையில், கோடியக்கரையில் வசிக்கும் ஸ்டனிஸ் அனஸ்ட்ராஜை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து போலியான ஆவணங்களை பயன்படுத்தி மேரிடென்சியானா இந்திய பாஸ்போர்ட் பெற்றுள்ளார். இதையறிந்த வேதாரண்யம் போலீசார், அவரை கைது செய்தனர்.
Similar News
News September 30, 2025
நாகை மாவட்டத்தில் அரசு வேலை; கடைசி வாய்ப்பு!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், நாகை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், இன்றுக்குள் (செப்.30) இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.16,000 – ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு<
News September 30, 2025
நாகை: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

நாகை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2-ம் (வியாழக்கிழமை) அன்று நாகை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மதுபான கடைகள் மற்றும் கூடங்களை மூட வேண்டும் வேண்டும் என்றும், அன்றைய தினம் தடையை மீறி மதுபானம் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் எச்சரித்துள்ளார். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி தெரியப்படுத்துங்க!
News September 30, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (செப்.29) இரவு 10 மணி முதல் இன்று(செப்.30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.