News January 3, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று(ஜன.02) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.03) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News January 5, 2026
நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (ஜன. 6) செவ்வாய் அன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
News January 5, 2026
நாகை: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News January 5, 2026
நாகை: கட்டையால் தாக்கியதில் பலி

கீழ்வேளூர் ஒன்றியம் ஆதமங்கலம் ஊராட்சி கீரங்குடி பகுதியில் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒரு தரப்பினரை மற்றொரு தரப்பினர் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ரவி (60) உயிரிழந்த நிலையில், கார்த்தி (40) அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக பிரகாஷ், சக்திவேல், சிவபாலன் ஆகிய மூவரை வலிவலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


