News March 6, 2026
நாகை: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

நாகை மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News March 7, 2026
நாகை: குடி போதையில் அரிவாள் வெட்டு; கறிக்கடை வியாபாரி பலி

திருமருகல் ஒன்றியம் மருங்கூர் அச்சுதன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியார்தாசன்(48). இவரிடம் மருங்கூரை சேர்ந்த கோபால் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இருவரும் கடந்த 1ஆம் தேதி மது அருந்திய போது ஏற்பட்ட மோதலில், கோபால் பெரியார்தாசனை அறிவாளால் வெட்யுள்ளார். இதில், தலையில் காயம் அடைந்த பெரியார் தாசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News March 7, 2026
நாகை: கோயிலில் அம்மன் தாலி திருட்டு – போலீஸ் விசாரணை

நாகை மாவட்டம் காமேஸ்வரம் தண்ணீர்பந்தல் வேதாரண்யம் சாலையில் அன்பழகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலை வழக்கம்போல பூசாரி காலையில் திறப்பதற்கு வந்த போது, கோயில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலிகள் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பூசாரி அளித்த புகாரின் பேரில், கீழையூர் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு, வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News March 7, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.06) இரவு 10 முதல் இன்று (மார்ச்.07) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


