News June 23, 2024
நாகை ஆட்சியர் கடும் எச்சரிக்கை

18 வயது நிறைவடையாத பெண்ணுக்கு குழந்தை திருமணம் நடத்தி வைப்பவர்களுக்கு 2 ஆண்டு கடும் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மேலும் 18 வயது நிரம்பாத பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டு கடும் சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டு சேர்த்து விதிக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் ஜானிடா வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 27, 2025
நாகையில் நாளை மாரத்தான் போட்டி

நாகையில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு மீன்வளப் பொறியியல் கல்லூரியில் தொடங்கி கங்களாஞ்சேரி சாலையில் நடைபெற உள்ளது. இதில் நாகை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்களை பெறுபவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். SHARE பண்ணுங்க
News September 27, 2025
நாகை மாவட்ட மாணவன் சாதனை!

நாகையை சேர்ந்த பானு குமார், தமிழ்ச்செல்வி ஆகியோரது மகன் இன்பன் (12). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் பங்கேற்றார். சுமார் 10 நாடுகளில் இருந்து 166 பேர் பங்கேற்ற போட்டியில் நாகையை சேர்ந்த இன்பன் 8-வது இடம் பிடித்து அசத்தினார். இந்நிலையில் சர்வதேச அளவில் சாதனை படைத்த இன்பனை, நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் நேரில் அழைத்து பாராட்டினார்.
News September 27, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (செப்.26) இரவு 10 மணி முதல் இன்று(செப்.27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலர்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.