News May 25, 2024
நாகை அருகே சோகம்

திருப்பூண்டியை அடுத்த கருங்கண்ணியை சேர்ந்தவர் புலவேந்திரன் 57 வயதான இவர் உடல்நிலை சரியில்லாததால் மன உளைச்சலில் இருந்த புலவேந்திரன் கடந்த 21ம் தேதி வயலுக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டுள்ளார். அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் ஒரத்தூர் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் இன்று காலை 8.30 க்கு உயிரிழந்தார். கீழையூர் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News September 26, 2025
நாகையில் பழந்தமிழர் பாரம்பரிய கருவிகளின் இசை நிகழ்ச்சி

நாகை மாவட்டம் நிர்வாகத்துடன் நாகை தனியார் ஷாப்பிங் மால் இணைந்து வழங்கும் பழந்தமிழர் பாரம்பரிய இசைக்கருவிகளின் இசை நிகழ்ச்சி வருகிற செப்.28ம் தேதி நாகை புதிய கடற்கரையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வு, பாரம்பரிய கலைக்களம் கலைக்குழுவின் நிறுவனர் சவுண்ட் மணி தலைமையில் நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பாரம்பரிய இசை நிகழ்ச்சியை கண்டு களிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
News September 26, 2025
நாகையில் பழந்தமிழர் பாரம்பரிய கருவிகளின் இசை நிகழ்ச்சி

நாகை மாவட்டம் நிர்வாகத்துடன் நாகை தனியார் ஷாப்பிங் மால் இணைந்து வழங்கும் பழந்தமிழர் பாரம்பரிய இசைக்கருவிகளின் இசை நிகழ்ச்சி வருகிற செப்.28ம் தேதி நாகை புதிய கடற்கரையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வு, பாரம்பரிய கலைக்களம் கலைக்குழுவின் நிறுவனர் சவுண்ட் மணி தலைமையில் நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பாரம்பரிய இசை நிகழ்ச்சியை கண்டு களிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
News September 26, 2025
வெற்றி பள்ளிகள் தொடக்க விழா: அமைச்சர் பங்கேற்பு

நாகையில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெற்றிப் பள்ளிகள் திட்ட தொடக்க விழா நாளை(செப்.27) நடைபெற உள்ளது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று, தொடங்கி வைக்க உள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மற்றும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.