News January 11, 2026

நாகை அருகே அதிர்ச்சி: 200 கிலோ கஞ்சா பறிமுதல்

image

வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையம் அருகே புதுப்பள்ளி பாலம் பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டுவரப்பட்ட 200 கிலோ கஞ்சாவை போலீசார் வெள்ளிக்கிழமை இரவு அதிரடியாக பறிமுதல் செய்தனா். இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர்.

Similar News

News February 5, 2026

நாகை மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

நாகை மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை க்ளிக் <<>>செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 5, 2026

நாகையில் வேலை வேண்டுமா?

image

நாகை மாவட்டம் பாப்பாகோவில் தனியார் கல்வி நிறுவன வளாகத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நாளை (பிப்.6) நடைபெற உள்ளது. இம்முகாமில் 2021 -25ஆம் ஆண்டு படித்து முடித்த ஐடிஐ, டிப்ளமோ, கலை அறிவியல், பார்மசி, நர்சிங் போன்ற துறைகளில் படித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் முகாமிற்கு சான்றிதழ்களின் நகல்கள் 5, பயோ டேட்டா உடன் கலந்து கொள்ள நிர்வாகத்தினர் அழைத்துள்ளனர்.

News February 5, 2026

நாகை: ரூ.40 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

image

வெளிப்பாளையம் தம்பி துறை பூங்கா பேருந்து நிறுத்தம் பகுதியில் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் சோதனை ஈடுபட்டனர். அபோது அங்கே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற சுரேஷ்குமார், ராமச்சந்திரன் ஆகிய இரண்டு பேரிடம் விசாரணை நடத்தினர். இதில், இருவரும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையெடுத்து அவர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரம் மதிப்பிலான 4 கிலோ கஞ்சா மற்றும் செல் போனை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!