News August 26, 2025

நாகை: அரசு பேருந்து குறித்து புகார் அளிக்க எண்

image

நாகை மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து, உங்களது புகார் அல்லது குறைகளை தெரிவிக்க ‘1800 599 1500’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் பேருந்து கால தாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர் அல்லது நடத்துநர் பயணிகளிடம் தரக்குறைவாக நடந்து கொள்வது குறித்து உங்களால் வீட்டிலிருந்த படியே புகார் தெரிவிக்க முடியும். இந்த தகவலை SHARE செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்க!

Similar News

News August 26, 2025

நாகை: தாசில்தார் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது ?

image

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், நாகை மாவட்ட மக்கள் 04365-248460 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News August 26, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

image

நாகை மாவட்ட மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெயிட்டுள்ள அறிக்கையில், ‘வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு, நகராட்சி அலுவலர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களால் முத்திரை வைக்கப்பட்ட ஆடு, மாடுகளின் இறைச்சிகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இதனை மீறி முத்திரை இல்லாமல் இறைச்சி வியாபாரத்தில் ஈடுபடுவோர் மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்துள்ளார். SHARE NOW!

News August 26, 2025

வேளாங்கண்ணி: காலை உணவு திட்டம் விரிவாக்க தொடக்க விழா

image

நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நகர்புற அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் விரிவாக்கத் தொடக்க விழா நாளை (26.08.2025) நடைபெற உள்ளது. என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!