News August 7, 2025

நாகை: அப்ரண்டிஸ் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு முகாம்

image

நாகை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகின்ற ஆக.11-ந் தேதி காலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் பல முன்னணி தொழிற் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஐடிஐ பயிற்சி முடித்த மாணவர்களை அப்ரண்டிஸ் (தொழிற் பழகுநர்) பயிற்சிக்கு தேர்வு செய்ய உள்ளன. எனவே ஐடிஐ பயிற்சி முடித்த மாணவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 13, 2025

நாகை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK NOW

image

நாகை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த <>தளத்தில் <<>>உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து கிளிக் செய்யவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. இதை SHARE பண்ணுங்

News August 13, 2025

மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம்; ம்னுக்களை பெற்ற எஸ்பி

image

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், காவல் கண்காணிப்பாளர் சு. செல்வக்குமார் பொதுமக்களை சந்தித்து, குறைகளை கேட்டறிந்து 20 மனுக்களை பெற்றுக்கொண்டார். பின் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதில், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News August 13, 2025

கால்நடை விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்!

image

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ். கீழ்வேளுர் மற்றும் கீழையூர் ஊராட்சி ஒன்றியங்களில் 50% மானியத்தில் ஏழை கால்நடை விவசாயிகளுக்கு சினையுற்ற கறவை பசுக்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கு கால்நடை மருந்தகம், கால்நடை உதவி மருத்துவர் மூலமாகவும், மற்றும் துணை பதிவாளர் பால் உற்பத்தியாளர்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாமென மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!