News September 11, 2025
நாகை: அடையாளம் தெரியாத ஆண் சடலம்

நாகை, வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை கடற்கரை பகுதி மீன்பிடி துறைமுகப் பகுதியில் சுமார் (40) வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் வேதாரண்யம் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 11, 2025
நாகை மக்களே உஷார்! இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (செப்.11) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW !
News September 11, 2025
ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து உரம் தயாரிப்பது குறித்து நகராட்சி ஆணையர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது.
News September 11, 2025
நாகை: ரூ.78,450 சம்பளத்தில் வேலை!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2025 ஆம் ஆண்டிற்கான 120 அதிகாரிகளுக்கான (Officers) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு Any டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.78,450 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.09.2025 தேதிக்குள் <