News September 18, 2025

நாகைள் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (செப்.17) இரவு 10 மணி முதல் இன்று(செப்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காலவர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News September 17, 2025

நாகையில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று(செப்.17) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் செல்வகுமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து குறைகள் கேட்டு அறிந்தார். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 23 மனுக்களை பெற்ற அவர், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

News September 17, 2025

நாகை: ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

image

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். <>myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid<<>> என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் போதும், உங்கள் ஆதார் எண் கிடைத்துவிடும். அதைவைத்து புதிய ஆதார் அட்டைக்கு எளிதாக விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News September 17, 2025

பெரியார் சிலைக்கு எம்எல்ஏ நாகை மாலி மரியாதை

image

தமிழகம் முழுவதும் தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாள் இன்று(செப்.17) கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில், கீழ்வேளூர் எம்எல்ஏ நாகை மாலி, பெரியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், CPIM கட்சியின் நாகை நகரச் செயலாளர் வெங்கடேசன், மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் முகேஷ் கண்ணன், CITU மாவட்ட துணைச் செயலாளர் ஜீவா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!