News November 28, 2024

நாகையில் 5 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

image

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தங்கி இருந்த மக்களை அதிகாரிகள் பள்ளிகளில் தங்க வைத்தனர். மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள காரணத்தால் நாகை நகராட்சி மேல்நிலை பள்ளி, அரசு மேல்நிலை பள்ளி உள்ளிட்ட 5 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. SHARE IT

Similar News

News August 16, 2025

நாகை: இலவச வீடியோ ஒளிப்பதிவு பயிற்சி! Apply Now

image

தமிழ்நாடு (தாட்கோ) அமைப்பு மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. வயது வரம்பு 18-30 இருக்க வேண்டும். கல்வித்தகுதி பன்னிரெண்டாம் தேர்ச்சி பெற வேண்டும். பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சினை பெற <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்!

News August 16, 2025

வேளாங்கண்ணி – முன்பை இடையே சிறப்பு ரயில் இயக்கம்

image

வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு மும்பை லோக்மான்ய திலக் ரயில் நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வரும் ஆக.26 மற்றும் செப்.7 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதுபோல வேளாங்கண்ணியில் இருந்து மும்பைக்கு ஆக.28, செப்.9 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

News August 16, 2025

நாகையில் நிலம் வாங்குவோர் கவனத்திற்கு

image

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ஆனால், அந்த கவலை இனி வேண்டாம். நிலத்தின் மீது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி அறிய <>clip.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் நிலத்தின் சர்வே நம்பர் கொடுத்து உங்களுக்கு தேவையான தரவுகளை தெரிந்து கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!