News October 27, 2024

நாகையில் 335 பேர் ‘ஆப்சென்ட்’

image

நாகை ஏ.டி.எம். மகளிர் கல்லூரியில் T.N.P.S.C யின் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு நேற்று நடைப்பெற்றது. இதில் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்து இருந்த 638 தேர்வர்களில் 335 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேற்கண்ட தகவலை நாகப்பட்டினம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள ஒரு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 7, 2026

நாகை: ரூ.49 லட்சம் மோசடி செய்த நபர் அதிரடி கைது

image

சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி, ஒருவர் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த 13 பேரிடம் ரூ.49 லட்சம் மோசடி செய்ததாக நாகை எஸ்.பி பாலகிருஷ்ணனிடம் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து எஸ்.பி உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடியில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த திருமலை (32) என்ற இளைஞரை கைது செய்தனர்.

News February 7, 2026

நாகை கலெக்டர் கடும் எச்சரிக்கை

image

நாகை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் நெல் அல்லது வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது. இதனை மீறும் பட்சத்தில் நேரடி நெல் கொள்முதல் பணியாளர்கள் மீதும், நெல் விற்பனை செய்தவர் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் எச்சரித்துள்ளார்.

News February 7, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், நேற்று (பிப்.06) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.07) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!