News August 11, 2025
நாகையில் 3015கிலோ குட்கா பான்மசாலா பறிமுதல்

நாகை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை சட்டவிரோதமாக குட்கா, பான்மசாலா விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது 96 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 3015 கிலோ குட்கா மற்றும் பான்மசாலா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என மாவட்ட காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள ஒரு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 11, 2025
வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு முகாம்

நாகை அவுரித்திடலில் வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து, வேளாண் இயந்திரங்கள பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம் நடைபெறவுள்ளது. இம்முகானது வருகிற (ஆக.13) அன்று நடைபெறுமென என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த முகாமில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்
News August 11, 2025
நாகையில் போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி

நாகை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பில் மாவட்ட காவல் அலுவலகத்தில் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்.
News August 11, 2025
நாகை: டிகிரி போதும்! ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

TNPSC குரூப் 2 மற்றும் 2A பிரிவில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரபபடவுள்ளது. உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர், உள்ளிட்ட பணிகளுக்கு 13.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.22,800 முதல் ரூ.1,19,500 வரை வழங்கப்படும். விரும்பமுள்ளவர்கள் <