News February 5, 2026
நாகையில் வேலை வேண்டுமா?

நாகை மாவட்டம் பாப்பாகோவில் தனியார் கல்வி நிறுவன வளாகத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நாளை (பிப்.6) நடைபெற உள்ளது. இம்முகாமில் 2021 -25ஆம் ஆண்டு படித்து முடித்த ஐடிஐ, டிப்ளமோ, கலை அறிவியல், பார்மசி, நர்சிங் போன்ற துறைகளில் படித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் முகாமிற்கு சான்றிதழ்களின் நகல்கள் 5, பயோ டேட்டா உடன் கலந்து கொள்ள நிர்வாகத்தினர் அழைத்துள்ளனர்.
Similar News
News February 5, 2026
நாகை மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

நாகை மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <
News February 5, 2026
நாகை: ரூ.40 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

வெளிப்பாளையம் தம்பி துறை பூங்கா பேருந்து நிறுத்தம் பகுதியில் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் சோதனை ஈடுபட்டனர். அபோது அங்கே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற சுரேஷ்குமார், ராமச்சந்திரன் ஆகிய இரண்டு பேரிடம் விசாரணை நடத்தினர். இதில், இருவரும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையெடுத்து அவர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரம் மதிப்பிலான 4 கிலோ கஞ்சா மற்றும் செல் போனை பறிமுதல் செய்தனர்.
News February 5, 2026
நாகை: மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை கைது

நாகை நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர் டேவிட் மரியதாஸ். இவரது மகள் தனியார் கல்லூரியில் படித்து வந்த நிலையில், வாலிபர் ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மரியதாஸ் மகள் அந்த இளைஞரை திருமணம் செய்து கொள்வதாக தந்தையிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மரியாதாஸ் மகளை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுறித்த புகாரின் பேரில், போலீசார் அவரை கைது செய்யதுள்ளனர்.


