News July 25, 2024
நாகையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் தோட்டக்கலை பண்ணையில் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது தோட்டக்கலையில் உற்பத்தி செய்த கன்றுகளையும் மா கன்றுகளை விட்டு செய்தல் பணியினையும் ஆய்வு செய்தார். அப்பொழுது தோட்டக்கலை அலுவலர் வைரவமூர்த்தி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்விகுமார் மற்றும் வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் உடன் இருந்தனர்
Similar News
News March 5, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் (மார்ச்.04) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.05) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 5, 2026
நாகையில் வேளாண்மை கண்காட்சி – விவசாயிகளுக்கு அழைப்பு

நாகை, வெளிப்பாளையம் GVR திருமண மண்டபத்தில் வருகிற மார். 6ஆம் தேதி உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் வேளாண்மை, தோட்டக்கலை, அங்கக சான்று துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை, வேளாண் அறிவியல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் அரங்குகள் அமைக்கின்றன.
எனவே விவசாயிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வேளாண்மை இணை இயக்குநர் பாபு அழைப்பு விடுத்துள்ளார்.
News March 5, 2026
தவறி விழுந்த பெயிண்டர் பரிதாப பலி

வேதாரணியம் அடுத்த தோப்புத்துறை மலாக்கா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் தமிமுன் அன்சாரி. பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், தோப்புத்துறை அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே ஒரு வீட்டில் வேலை பார்த்தபோது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்துள்ளார். அவரை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


