News October 19, 2025
நாகையில் மழையால் பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

திருமருகல் ஒன்றிய பகுதிகளில் 3,583 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நேரடி நெல் விதைப்பு மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து உள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அறுவடைக்கு தயரான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நெற்பயிர்கள் அழுகி துர்நாற்றம் விசுகிறது. இதனால் சாகுபடி செய்த விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். மேலும் அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
Similar News
News October 19, 2025
நாகையில் சாலை மறியல் போராட்டம்

நாகை மாவட்டம் வாழக்கரையில் நேற்று(அக்.18) இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் (DPC) TNCSC தாளடி நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து, K.சித்தார்த்தன் தலைமையில் இந்திய மார்க்சிஸ்ட் கட்சியினஎ சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்,. இதில் விவசாயிகள், பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
News October 19, 2025
நாகை: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

நாகை மாவட்டத்தில் 18 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
News October 19, 2025
நாகை: சிக்கல் சிங்காரவேலவருக்கு கந்த சஷ்டி திருவிழா

நாகை மாவட்ட பிரசித்தி பெற்ற சிக்கல் நவநீதேஸ்வரர் சுவாமி கோயிலில், சிங்காரவேலருக்கு கந்த சஷ்டி திருவிழாவை வருகிற அக்.21ஆம் தேதி முதல் அக்.31ஆம் தேதி வரை நடைப்பெற உள்ளது. அதனையொட்டி முதல் நாளான அக்.21ம் தேதி கணபதி ஹோமம் – வாஸ்து சாந்தியும் நடைப்பெற உள்ளது என செயல் அலுவலர் ப.மணிகண்டன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இதில், பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.