News September 6, 2025

நாகையில் போக்குவரத்து மாற்றம்

image

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவை முன்னிட்டு, இன்று (செப்.6) முதல் செப்.8 வரை, சென்னை, கடலூர், புதுச்சேரி வாகனங்கள் புத்தூர் ரவுண்டானா சாலை வழியாக சென்ட் பீட்டர்ஸ் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட வேண்டும். அரசுப் பேருந்துகள் பாப்பா கோவில் ஆர்ச் வழியாக புதிய தற்காலிக பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்று நாகை மாவட்ட எஸ்.பி சு.செல்வக்குமார் போக்குவரத்து மாற்றங்களை அறிவித்துள்ளார்.

Similar News

News September 6, 2025

நாகை: கோழி பண்ணை அமைக்க மானியம் வேண்டுமா?

image

நாகை மக்களே, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் இலவச கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியம் வழங்கப்படுகிறது. இதனை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பித்து பெறலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News September 6, 2025

நாகை: ITI, டிப்ளமோ முடித்திருக்கிறீர்களா..சூப்பர் வேலை!

image

நாகை மக்களே, திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ முடித்த விருப்பம் உள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு, ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க செப்.,21 கடைசி நாளாகும். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 6, 2025

வேளாங்கண்ணி நாளை பெரிய தேர் பவனி

image

வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி நாளை 7ந் தேதி இரவு நடக்கிறது. இதை முன்னிட்டு மாலை 5.15 மணிக்கு தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு நவநாள் ஜெபம் ஆகியவை நடத்தப்படுகிறது. அதனை தொடர்ந்து இரவு புதுவை, கடலூர் உயர் மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் தலைமையில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது.

error: Content is protected !!