News September 27, 2025
நாகையில் நாளை மாரத்தான் போட்டி

நாகையில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு மீன்வளப் பொறியியல் கல்லூரியில் தொடங்கி கங்களாஞ்சேரி சாலையில் நடைபெற உள்ளது. இதில் நாகை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்களை பெறுபவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். SHARE பண்ணுங்க
Similar News
News September 27, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வரும் அக்.5 (ஞாயிறு), அக்.6 (திங்கள்), அக்.7 (செவ்வாய்) ஆகிய தேதிகளில் 70 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. எனவே தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News September 27, 2025
நாகை: இன்றே கடைசி வாய்ப்பு!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (NABARD) துணை நிறுவனமான NABFINS, திருச்சி மண்டலத்தில் காலியாக உள்ள வாடிக்கையாளர் சேவை அதிகாரி (Customer Service Officer CSO) பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்கு 12-ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த<
News September 27, 2025
நாகை மாவட்ட மாணவன் சாதனை!

நாகையை சேர்ந்த பானு குமார், தமிழ்ச்செல்வி ஆகியோரது மகன் இன்பன் (12). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் பங்கேற்றார். சுமார் 10 நாடுகளில் இருந்து 166 பேர் பங்கேற்ற போட்டியில் நாகையை சேர்ந்த இன்பன் 8-வது இடம் பிடித்து அசத்தினார். இந்நிலையில் சர்வதேச அளவில் சாதனை படைத்த இன்பனை, நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் நேரில் அழைத்து பாராட்டினார்.