News September 13, 2025
நாகையில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்; எஸ்பி புதிய தகவல்

நாகை மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் செப்.20ம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த நிலையில், இன்று அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் மாவட்ட எஸ்பி செல்வக்குமார் இதற்கான அனுமதி மறுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். தவெக மாவட்ட செயலாளர் சுகுமாரன் சார்பில் 7 இடங்களுக்கு அனுமதி கோரப்பட்ட நிலையில், இடம் தேர்வு தொடர்பான பரிசீலனை முடிந்த பின் இறுதி அனுமதி வழங்கப்படுமென தெரிவித்துள்ளார்.
Similar News
News September 13, 2025
நாகையில் விஜய் பரப்புரைக்கு மேலும் சிக்கல்

நாகையில் தவெக தலைவர் விஜய் வருகிற செப்.20நம் தேதி பரப்புரைக்கு அவுரி திடலில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாற்று இடமாக புத்தூர் ரவுண்டானா, அபிராமி சன்னதி திருவாசல் காடம்பாடி ஐடிஐ வளாகம் என மூன்று இடங்களை தாவெகவினர் தேர்வு செய்த கொடுத்தனர். அந்த இடங்களிலும் போதுமான இடவசதி இல்லை என அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தவெகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News September 13, 2025
நாகை மக்களே.. ரூ.30,000 மாத சம்பளத்தில் வேலை!

நாகை மக்களே.. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Engineer/ Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News September 13, 2025
நாகை: விஜய் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு

நாகையில் வரும் செப்.20-ந் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதனை முன்னிட்டு நாகை புதிய பேருந்து நிலையம் அருகே அவுரி திடலில் மக்களை சந்தித்து பரப்புரை செய்ய நகராட்சியிடம் தவெக சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது. இந்நிலையில் அன்றைய தினம், அவுரி திடலில் திமுக கூட்டம் நடைபெற இருப்பதால் அங்கு விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உங்கள் கருத்து ?