News October 12, 2025
நாகையில் டூவீலர் ஏலம் அறிவிப்பு – போலீஸ்

நாகை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றவழக்குகளில் கைப்பற்றப்பட்ட 104 இருசக்கர வாகனங்கள் வருகிற அக்.16ஆம் தேதி காலை 10 மணிக்கு நாகை பழைய ஆயுத படை மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் 15ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வாகனங்களை நேரில் பார்வையிடலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
Similar News
News March 7, 2026
நாகை: MLA ஒ.எஸ்.மணியன் அழைப்பு

வேதாரணயம் MLA ஒ.எஸ்.மணியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தேசிய ஜன நாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக, தமாக,வளரும் தமிழகம், ஐஜேகே கட்சிகளின் நிர்வாகிகளின் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் கூட்டம், இன்று மாலை 5 மணிக்கு ECR சாலையில் உள்ள அதிமுக மாவட்டக் அலுவலகத்தில் நடைபெறும். இதில் நாகை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து நிர்வாகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.
News March 7, 2026
நாகை: குடி போதையில் அரிவாள் வெட்டு; கறிக்கடை வியாபாரி பலி

திருமருகல் ஒன்றியம் மருங்கூர் அச்சுதன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியார்தாசன்(48). இவரிடம் மருங்கூரை சேர்ந்த கோபால் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இருவரும் கடந்த 1ஆம் தேதி மது அருந்திய போது ஏற்பட்ட மோதலில், கோபால் பெரியார்தாசனை அறிவாளால் வெட்யுள்ளார். இதில், தலையில் காயம் அடைந்த பெரியார் தாசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News March 7, 2026
நாகை: கோயிலில் அம்மன் தாலி திருட்டு – போலீஸ் விசாரணை

நாகை மாவட்டம் காமேஸ்வரம் தண்ணீர்பந்தல் வேதாரண்யம் சாலையில் அன்பழகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலை வழக்கம்போல பூசாரி காலையில் திறப்பதற்கு வந்த போது, கோயில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலிகள் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பூசாரி அளித்த புகாரின் பேரில், கீழையூர் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு, வழக்கு பதிவு செய்துள்ளனர்.


