News April 2, 2024
நாகையில் கடும் போக்குவரத்து நெரிசல்

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட அக்கரைப்பேட்டை பகுதியில் கிடப்பிலிருந்த மேம்பால கட்டுமான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதனால் ஆட்டோ கார் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்படுகிறது. இதனால் நான்கு கால்மண்டபம், எல் ஐ சி ஆபீஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு கடும் வெயிலால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை எதிர் கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 24, 2025
நாகைக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.24) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன
News November 24, 2025
நாகை: நெற்பயிர்களை சூழ்ந்த மழைநீர்

கீழ்வேளூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கீழ்வேளூர், வடகரை, கோகூர், ஆணைமங்கலம். வங்காரமாவடி, ஒர்குடி, கடம்பன்குடி, பெருங்கடம்பனூர் உள்ளிட்ட சுற்றுபுற பகுதிகளில் உள்ள சம்பா தாளடி நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
News November 24, 2025
நாகை மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழை நிலவரம்

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அவ்வகையில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை நிலவரம்; நாகை 8.3 செமீ, திருப்பூண்டி 7.6 செமீ, வேளாங்கண்ணி 8.3 செமீ, திருக்குவளை – 9.6 செமீ, தலைஞாயிறு 9.9 செமீ (அதிகபட்சம்),வேதாரண்யம் 6.5 செமீ, கோடியக்கரை 6.0 செமீ.மொத்தமாக மாவட்டத்தில் 56.4 செமீ மழை பதிவாகி உள்ளது.


