News March 19, 2024

நாகையில் கடல் சேற்றில் சிக்கிய வயதான தம்பதி

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடலில் குளிக்க சென்ற சிக்கல் பொராவாசேரியை சேர்ந்த ஜெயராம் அவருடைய மனைவி கமலா இவர்கள் இண்டு பேரும் கடலில் குளிக்க சென்றனர். கடல் சேறாக இருப்பது தெரியாமல் அந்த பகுதியில் குளிக்க சென்ற பொழுது திடீரென இடுப்பளவு சேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்துள்ளனர். உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மணி நேரம் போராடி காப்பாற்றினர்

Similar News

News February 10, 2026

நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த திருமருகல் உடையான்தோப்பு தெருவை சேர்ந்த சுகந்தி (45) என்பவர் காணாமல் போன தன் கணவரை கண்டுபிடித்து தர கோரி, அலுவலக வாயிலில் தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட போலீசார், சுகந்தி மீது தண்ணீரை ஊற்றி அவரை மீட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News February 10, 2026

நாகை: 2 நாட்களுக்கு தண்ணீர் வராது!

image

கீழ்வேளூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், குடிநீர் குழாய்கள் இணைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வருகின்ற பிப்.12 மற்றும் பிப்.13 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என்றும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

News February 10, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், நேற்று (பிப்.09) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!