News November 1, 2025
நாகைக்கு வருகை தரும் தமிழக ஆளுநர்

தமிழ்நாடு ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் 10வது பட்டமளிப்பு விழா வருகிற நவ.3ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இவிழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று 496 மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார். இதில், மீன்வளத்துறை அமைச்சர் ஆர். ராதாகிருஷ்ணன், ஐசிஏஆர் துணை இயக்குநர் ஜாய்கிருஷ்ணா ஜெனா உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். மேலும் அரங்கில் கைப்பேசி, புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 2, 2025
நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (நவ.01) இரவு 10 மணி முதல் இன்று (நவ.02) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 1, 2025
நாகை: கறவை மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன்!

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் உண்டு. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News November 1, 2025
வேளாங்கண்ணி – எர்ணாகுளம் ரயில் சேவையில் மாற்றம்

முத்துப்பேட்டை தர்கா சந்தனக்கூடு விழாவையொட்டி, வேளாங்கண்ணி எர்ணாகுளம் விரைவு ரயில் நவ.2 மற்றும் 4ஆம் தேதிகளில், தற்காலிகமாக முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.


