News March 13, 2025

நாகர்கோவில்: 52 வார்டுகளில் குழந்தைகள் பாதுகாப்பு குழு!

image

நாகர்கோவில் மாநகரில் 52 வார்டுகளிலும் அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் 15 உறுப்பினர்களைக் கொண்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட உள்ளது. குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவில் செவிலியர், சமூக ஆர்வலர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், மகளிர் சுய உதவி குழுவினர் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் ஆகியோர்கள் இடம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 12, 2025

குமரி: ஆழ்கடல் மீன் பிடியில் நாமதான் ராஜா!

image

குமரி மாவட்ட மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடியில் இந்தியாவிலேயே சிறந்தவர்கள். இவர்களின் மீன்பிடி நுட்பங்கள், பல நாட்கள் கடலிலேயே தங்கி ஆழ்கடல் மீன்களை பிடிக்கும் வல்லமை ஆகியவை தனித்துவமானவை. டூனா, சுறா, மத்தி போன்ற பல்வேறு மீன் வகைகளைப் பிடித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யபடுகின்றது. இது குமரி மாவட்ட மக்களின் ஒரு அரிய திறமை.

News September 12, 2025

குமரியில் தற்செயல் விடுப்பு எடுத்து ஊழியர்கள் போராட்டம்

image

ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் வணிகவரி துறை சங்கம் ஊரக வளர்ச்சித் துறை, உதவி வேளாண்மை அலுவலர் சங்கம், உதவி தோட்டக்கலை அலுவலர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு துறை வாரி சங்கங்கள் இணைந்து நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் இந்த அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

News September 11, 2025

குமரி: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி

image

குமரி மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13 வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய<> இங்கே கிளிக் செய்யவும்<<>>. இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்.

error: Content is protected !!