News March 13, 2025

நாகர்கோவில்: 52 வார்டுகளில் குழந்தைகள் பாதுகாப்பு குழு!

image

நாகர்கோவில் மாநகரில் 52 வார்டுகளிலும் அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் 15 உறுப்பினர்களைக் கொண்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட உள்ளது. குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவில் செவிலியர், சமூக ஆர்வலர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், மகளிர் சுய உதவி குழுவினர் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் ஆகியோர்கள் இடம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 3, 2026

குமரி: விஷம் குடித்து டிரைவர் தற்கொலை

image

நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் இம்மானுவேல் (50). இவர் டிரைவர் ஆவார். இவருக்கு கடந்த ஒரு மாத காலமாக சிறுநீரக பிரச்சனை இருந்து வந்தது. இதனால், மனவேதனையில் இருந்த அவர் பார்வதிபுரம் பகுதியில் களைக்கொல்லி விஷம் மருந்தை குடித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக, இரணியல் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

News March 2, 2026

குமரி: ஓடும் ரயிலில் விழுந்து ஒருவர் பலி

image

அம்மாண்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் அஜின் (29 ). கபடி வீரரான இவர் தனது நண்பர்களுடன் சென்னையில் உள்ள நண்பரை பார்ப்பதற்காக நேற்று மாலை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றனர். தளபதி சமுத்திரம் பகுதியில் ரெயில் சென்று கொண்டிருந்தபோது அஜின் ரயில் பெட்டியில் இருந்து கீழே தவறி விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு அவர் உயிரிழந்த நிலையில் நாகர்கோவில் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 2, 2026

குமரி : இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

image

குமரி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. <>இங்கு கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

error: Content is protected !!