News March 19, 2025
நாகர்கோவில் மாவட்ட சிறைச்சாலையை இடமாற்ற திட்டம்

நாகர்கோவிலில் மாவட்ட சிறைச்சாலை உள்ளது. குற்றச் செயலில் ஈடுபட்டு கைதாகும் கைதிகள் இங்கு அடைக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 40 முதல் 50 பேர் வரை கைதிகளை பார்க்க வரும் நிலையில், இங்கு போதிய இடவசதி இல்லாத நிலையில் உள்ளது. அதனால் புதிய சிறைச்சாலை அமைக்க அகஸ்தீஸ்வரம் தாலுகா பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். ஒரே இடத்தில் 30 ஏக்கர் அளவிற்கு புறம்போக்கு நிலங்களை தேடி வருவதாக கூறப்படுகிறது.
Similar News
News September 19, 2025
குமரி: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <
News September 19, 2025
குமரி: நாளை ரயில் சேவையில் முக்கிய மாற்றம்

கோட்டயம்- சிங்கவனம் இடையே பாலம் பராமரிப்பு பணியையொட்டி நாளை (செப் 19) ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ரெயில் எண் 12624 திருவனந்தபுரம்-சென்னை சென்டிரல் அதிவேக ரெயில் ஆலப்புழை வழியாக இயக்கம்; ரெயில் எண் 22503, ரெயில் எண் 16343, ரெயில் எண் 16347 ஆலப்புழை வழியாக இயக்கம்; ரெயில் எண் 16366) நாகர்கோவில் – கோட்டயம் ரெயில் சங்கனாச்சேரி வரை இயக்கக்கபடுகிறது.
News September 19, 2025
குமரி: மக்களே இந்த அதிசய காட்சியை காணத்தவறாதீர்கள்

திருவட்டாறில் 108 வைணவத்தலங்களில் ஒன்றான ஆதிகேசவப்பெருமாள் ஆலயம் உள்ளது. பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் 3, 4, 5 தேதிகளில் சூரியன் மேற்குப்பகுதியில் மறையும் போது சூரியனின் செங்கதிர்கள் கோவில் கருவறையில் பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் ஆதிகேசவப்பெருமாளின் திருமேனியில் விழும் வகையில் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த அதிசய ஒளியை செப்.19, 20, 21 தேதி மாலையில் தரிசிக்கலாம்.