News November 28, 2025

நாகர்கோவில் மாநகராட்சி நகர் நல அலுவலர் நியமனம்

image

நாகர்கோவில் மாநகர நகர் நல அலுவலர் ஆல்பர் மதியரசு விடுப்பில் சென்றதைத் தொடர்ந்து அரவிந்த் ஜோதி நாகர்கோவில் நகர் நலஅலுவலர் பொறுப்பில் இருந்து வந்தார். இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி நகர் நல அலுவலராக தேனி சுகாதாரப் பிரிவை சேர்ந்த திட்ட அதிகாரி மனோஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் பொறுப்பினை ஒப்படைக்க அரவிந்த் ஜோதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Similar News

News December 1, 2025

குமரியில் 9 புதிய இன்ஸ்பெக்டர்கள் நியமனம்

image

குமரி மாவட்டத்திற்கு 9 எஸ்.ஐ.க்கள் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாடசாமி புதுக்கடை இன்ஸ்பெக்டராகவும், மதுரை கருப்பசாமி தக்கலை இன்ஸ்பெக்டராகவும், நெல்லை தமிழரசன் மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டராகவும், தென்காசி மாடன் ராம்குமார் திருவட்டார் இன்ஸ்பெக்டராகவும் பதவி உயர்வுடன் நியமிக்கப்பட்டுள்ளனர். நெல்லை வேலம்மாள் வடசேரி இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News November 30, 2025

சுசீந்திரம் கால பைரவர் கோவிலில் ராகு கால பூஜை

image

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் திருவாவடுதுறை ஆதீனம் மடம் ஶ்ரீகாலபைரவர் திருத்தலத்தில் இன்று(நவ.30) ஞாயிறு இராகு கால பூஜையை முன்னிட்டு ஸ்ரீ கால பைரவருக்கு பால், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைப்பெற்றது. பின்னர் அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கால பைரவரை தரிசனம் செய்தனர்.

News November 30, 2025

குமரியில் 7 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

image

குமரியில் ஏழு இன்ஸ்பெக்டர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவட்டாறு இன்ஸ்பெக்டர் காந்திமதி குலசேகரத்திற்கும், கோட்டாறு இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தென்தாமரை குளத்திற்கும், அருமனை இன்ஸ்பெக்டர் சாந்தி நேசமணி நகருக்கும், குலசேகரம் இன்ஸ்பெக்டர் கனகராஜ் கொல்லங்கோடு, தக்கலை இன்ஸ்பெக்டர் உமா கொற்றிகோட்டிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 2 இன்ஸ்பெக்டர்கள் நெல்லைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!