News January 21, 2026

நாகர்கோவில்: கல்லூரி மாணவர் தற்கொலை

image

நாகர்கோவில் பள்ளிகளைப் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (21). கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், சக மாணவர் ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டதால் ஆகாஷ் கல்லூரிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த ஆகாஷ் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 30, 2026

குமரி மக்களுக்கு SP முக்கிய அறிவிப்பு…!

image

குமரி மாவட்ட மக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க SP ஸ்டாலின் புகார் எண்கள் அறிவித்துள்ளார். அதில் புகார் மனுக்கள் மீதான போலீஸ் விசாரணை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், காவல்துறை மக்கள் உறவை மேம்படுத்த ஆலோசனைகள், சட்டம் ஒழுங்கு, போதைப் பொருட்கள் தொடர்பான தகவல்களை 7708239100, 6385211224 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். இதில் புகார் செய்பவரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். SHARE IT

News January 30, 2026

குமரி: கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது

image

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பள்ளம்பாலம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது கண்டன்விளை பகுதியை சேர்ந்த ரெஜிஸ் என்ற வாலிபர் 1.20 கிலோ கஞ்சா வைத்திருப்பது தெரிந்தது. உடனே அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் ரெஜிஸ் மீது வழக்குப்பதிவு செய்து இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

News January 30, 2026

குமரி: வாகன ஓட்டிகளுக்கு SP எச்சரிக்கை

image

குமரியில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே கனரக வாகனங்கள் மாவட்டத்திற்குள் வருவதற்கு SP உத்தரவிட்டுள்ளார். இந்த நேர கட்டுப்பாட்டை மீறி வந்த 4 கனரக வாகனங்கள் மீது நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று அபராதம் விதித்தனர். இந்நிலையில் நேர கட்டுப்பாட்டை மீறி கனரக வாகனங்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என SP எச்சரிக்கை.

error: Content is protected !!