News April 15, 2025

நாகர்கோவிலில் மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாம்

image

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாமானது நாளை(16.04.2025) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாகர்கோவிலில் நடைபெற உள்ளது. இதில் 30க்கும் அதிகமான, புகழ்மிக்க நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவைப்படும் தகுந்த நபர்களை வேலைக்கு தேர்வு செய்ய இருக்கிறார்கள் என இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

Similar News

News January 22, 2026

குமரி: தொழிலாளி மீது தாக்குதல்; 3 பேர் மீது வழக்கு

image

சுசீந்திரம் அருகே பல்பநாபன் புதூரைச் சேர்ந்தவர் செல்வராஜ்(47). இவர் கூலித்தொழிலாளியாவார். கோவில் அருகே மூன்று பேர் மது அருந்திக் கொண்டு சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர். செல்வராஜ் அவர்களை அங்கிருந்து செல்லும்படி கூறிய நிலையில் செல்வராஜை 3 பேரும் சேர்ந்து தாக்கினார்கள். இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

News January 22, 2026

குமரி: ரூ.520 செலுத்தினால் ரூ.10 லட்சம் மருத்துவ காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். *SHARE

News January 22, 2026

வட்ட வழங்கல் அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் முகாம்

image

பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைய வேண்டும். மக்களின் குறைபாடுகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். இவற்றிற்காக சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் ஜன.24 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் வைத்து நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!