News September 5, 2024

நாகர்கோவிலில் கழிவறை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா

image

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் புதிதாக கழிவறை கட்டும் பணியினை மேயர் மகேஷ் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் இன்று காலை அடிக்கல் நாட்டும் விழாவை துவக்கி வைத்தனர். இந்த அடிக்கல் நாட்டு விழாவில் துணை மேயர் மேரி பிரின்ஸிலதா, மண்டலத்தலைவர் ஜவஹர், தொழில்நுட்ப அலுவலர் பாஸ்கர்,
சுகாதார அலுவலர் ராஜாராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News November 10, 2025

குமரியில் வாக்காளர் பட்டியல் திருத்தம் விண்ணப்பம் விபரம்

image

குமரி சட்டமன்ற தொகுதியில் 2,81,793, நாகர்கோவில் தொகுதியில் 2,07,186, குளச்சல் தொகுதியில் 2.49,733, பத்மநாபபுரம் தொகுதியில் 2,27,417, விளவங்கோடு தொகுதியில் 2,343,43, கிள்ளியூர் தொகுதியில் 2,43,346 என மொத்தம் 14,43,818 கணக்கீட்டு படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்பட்டுள்ளது. இது மொத்த வாக்காளர் கணக்கீட்டு பட்டியலில் 90.64 சதவீதம் ஆகும் என்று மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

News November 10, 2025

குமரி: ரூ.35,400 சம்பளத்தில் ரயில்வே வேலை!

image

குமரி மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Ticket Supervisor, Station Master உள்ளிட்ட 5810 பணியிடங்களக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,500 – ரூ.35,400 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்க.

News November 10, 2025

குமரியில் பெண் அதிகாரியிடம் நகை பறிப்பு

image

குமரியில் இருந்து மங்களூருக்கு பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை புறப்பட இருந்தது. அப்போது திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வன அதிகாரி திவ்யா அதில் ஏறச் சென்ற போது ஒருவர் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு ஓடிவிட்டார். ரயில்வே பாதுகாப்பு படையினரும் போலீசாரும் இணைந்து அந்த நபரை தேடி வந்தனர் அப்போது அங்கு பதுங்கி இருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நபரை கைது செய்தனர்.

error: Content is protected !!