News July 7, 2025

நாகநாத சுவாமி கோயிலில் தேரோட்ட விழா

image

நாகை மாவட்டம் நாகூரில் நாகநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் 29ம் ஆண்டு ஆனி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற ஜூலை 9ம் தேதி நடைபெற உள்ளது. இதில், திரளான பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள கோவில் நிர்வாகத்தினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 22, 2025

நாகையில் அப்பா அம்மா மகனுக்கு ஆயுள் தண்டனை

image

நாகை மாவட்டம் முட்டம் கிராமத்தை சேர்ந்த பரமசிவம், மனைவி பாக்கியவதி, மகன் மகாதேவன் ஆகியோர், அதே பகுதியை சேர்ந்த நரசிங்கமூர்த்தி என்பவரை கடந்த 2022ல் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதுகுறித்த வழக்கில் நாகை மாவட்ட நீதிபதி கந்தகுமார் நேற்று தீர்ப்பளித்தார். அப்போது பரமசிவம், பாக்கியவதி, மகாதேவன் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

News August 22, 2025

நாகை மக்களே.. அரசு வங்கியில் வேலை! APPLY NOW

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான பஞ்சாப் & சிந்து வங்கியில், தமிழத்தில் காலியாக உள்ள 85 ‘Local Bank Officer’ பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து, வரும் செப்.4-ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.48,480 – 85,920/- வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் நபர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News August 22, 2025

நாகை: சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மெசேஜ் போதும்!

image

கியாஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!