News November 26, 2024
நவ.,29 வரை மீன் பிடிக்க செல்லவேண்டாம்: மீன்வளத்துறை

சென்னை வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி, வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி நிலை கொண்டுள்ளதால் தமிழ்நாடு கடற்பகுதியில் நவ.,25 முதல் 29ஆம் தேதி வரை காற்றின் வேகம் அதிகபட்சம் 75 கி.மீ வரை வீசக்கூடும். ஆதலால் மீனவர்கள் இந்நாட்களில் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். மீனவர்களுக்கான எச்சரிக்கையை ஆலயங்கள், மீன்பிடிக்கூடங்களில் அறிவிப்பு செய்யுமாறு மீன் வளத்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News November 13, 2025
குமரி: PF பிரச்சனைகள் தீர ஓரே வழி!

குமரி மக்களே, உங்கள் PF கணக்கு சிக்கல்கள், பேலன்ஸ் மற்றும் பண பரிவர்த்தனைகளுக்குத் தீர்வு காண குமரி மாவட்டத்திற்கான பிரத்யேக வாட்ஸ்அப் எண் உள்ளது. இந்த 6381122366 எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி PF பேலன்ஸ், பணம் எடுத்தல், PF பிரச்சனைகள் குறித்த சேவைகள் மேற்கொள்ளலாம். நீண்ட நாள் PF பிரச்சனைகளை குமரி மாவட்ட அதிகாரிகளிடம் நேரடியாக பேசி நிரந்தர தீர்வு காணலாம்.மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News November 13, 2025
குமரி: மனோதங்கராஜை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்

ஆர் .எஸ் .எஸ் மற்றும் பாரதிய பாரதிய ஜன சங்கம் மீது பொய்யான அவதூறுகளை பரப்பும் தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் -ஐ கண்டித்து இரணியல், குளச்சல், திங்கள் சந்தை, வெள்ளி சந்தை ஆகிய பகுதிகளில் இன்று (நவ.13) குமரி கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
News November 13, 2025
குமரி மாவட்டத்தில் காவல் அதிகாரிகள் அறிவிப்பு

குமரி மாவட்ட பொதுமக்களின் கவனத்திற்கு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை இன்றைய (12.11.2025) இரவு ரோந்து அதிகாரிகள்
உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள். என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர் .ஸ்டாலின் ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.


