News November 6, 2025
நள்ளிரவு 1 மணி வரை 11 மாவட்டங்களில் மழை பொழியும்

நள்ளிரவு 1 மணி வரை 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, விருதுநகர், செங்கல்பட்டு, தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேவையின்றி வெளியே சென்று மழையில் நனையாதீர்கள். உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?
Similar News
News January 31, 2026
நிதிக்காக பாகிஸ்தான் பிச்சை எடுப்பது அவமானம்: பாக்., PM

நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து பாகிஸ்தான் PM ஷெபாஸ் ஷெரீப் வெளிப்படையாக பேசியுள்ளார். பாகிஸ்தானின் பொருளாதாரத்தைச் சமாளிக்க உலக நாடுகளிடம் நிதியுதவி கேட்பது தமக்கும், ராணுவத் தளபதிக்கும் மிகுந்த மனவேதனையையும் அவமானத்தையும் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கடன் வாங்குவது நாட்டின் சுயமரியாதையை பாதிப்பதாகவும், வெளிநாடுகளிடம் கையேந்தும்போது தலைகுனிய வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
News January 31, 2026
திமுக MLA பழனியாண்டியை கைது செய்க: சீமான்

கரூர் அருகே கனிமவள கொள்ளை குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் தாக்கப்பட்டதுக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் ஊடகவியலாளருக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாகவும், ஆட்களை வைத்து செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய திமுக MLA பழனியாண்டியை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். DMK ஆட்சியில் போதை, கனிமவளகொள்ளையில்தான் TN முதன்மை மாநிலமாக உள்ளதாகவும் சாடியுள்ளார்.
News January 31, 2026
BREAKING: கூட்டணி முடிவை அறிவித்தார் விஜய்

‘I’am not a kingmaker, I will win’ என வரும் தேர்தலில் தனித்து களம் காண்பதை முதல் முறையாக விஜய் உறுதி செய்துள்ளார். NDTV-க்கு அவர் அளித்த நேர்காணலில், தான் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பதாக அதிரடியாக கூறியுள்ளார். கடந்த சில காலமாக ஆட்சியில் பங்கு எனக் கூறி வந்த தவெக காங்கிரஸ், அமமுக, பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தற்போது தனித்து களம் காணத் தயாராகியுள்ளது.


