News December 10, 2024
நள்ளிரவில் திருட முயன்ற 4 பேர் கைது

வலங்கைமான் காவல் சரகத்திற்குட்பட்ட நார்த்தங்குடியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (81). மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவு நேரத்தில் வீட்டு கதவை உடைத்து கோவிந்தராஜை கத்தியை காட்டி மிரட்டி திருட முயன்றனர். இந்நிலையில், கோவிந்தராஜ் கூச்சலிடவும் அக்கம்பக்கத்தினர் வந்ததும் தப்பியோடினர். பின்னர், போலீசார் விசாரணையில், சஜாத் அலி, பிரபு ராஜா, செல்வகார்த்தி, கலையரசன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
Similar News
News September 15, 2025
திருவாரூர்: கம்யூனிஸ்ட் கட்சியினரின் பாடை ஊர்வலம்!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள அத்திக்கடை, பாமணி கிராமங்களில் மக்கள் சந்திக்கக் கூடிய அடிப்படை பிரச்சனைகளை அரசுக்கு அடையாளப்படுத்தும் விதமாக பாடை ஊர்வல போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தலைமையில் இன்று (செப்.15) நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு முன்னிலை வகித்தார்.
News September 15, 2025
திருவாரூர்: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <
News September 15, 2025
திருவாரூர்: கரண்ட் பில் குறித்து சந்தேகமா? இத செய்ங்க!

திருவாரூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை வேண்டாம். <