News December 25, 2025
நல்லூர் அருகே வாசமாக சிக்கிய மூவர்: அதிரடி கைது

திருப்பூர் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் பிரிவு அருகே, சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட போலீசார், லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட மோனிஸ்குமார், சூர்யா அரவிந்த், சேக் அலாவுதீன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
Similar News
News January 27, 2026
திருப்பூர்: போட்டோ பிரேம் கடை வைக்க ஆசையா?

திருப்பூர் முதலிபாளையம் பிரிவில் கனரா வங்கி மூலம் 10 நாள் இலவச போட்டோ பிரேம், லேமினேஷன் மற்றும் ஸ்கிரீன் பிரிண்டிங் பயிற்சி நடைபெறுகிறது. இதற்கான நேர்காணல் 29.01.26 அன்று நடக்கும். ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் 100 நாள் வேலை அட்டை உள்ளோருக்கு முன்னுரிமை உண்டு. விருப்பமுள்ளோர் 94424-13923, 99525-18441 எண்களைத் தொடர்புகொள்ளலாம்.
News January 27, 2026
வீரபாண்டி அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட நொச்சி பாளையம் ரோடு அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆசை தம்பி(23) என்பதும் அவர் அந்த பகுதியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த 34 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
News January 27, 2026
உடுமலை அருகே கத்திக்குத்து சம்பவம்!

உடுமலை அருகே பெரிய வாளவாடியை சேர்த்தவர் வெள்ளியங்கிரி. இவரின் மனைவி உடன் விஜய் என்பவர் பேசுவதை வெள்ளிங்கிரி கண்டித்தால் மனைவி தாய் வீட்டுக்கு சென்றார். ஆத்திரமடைந்த வெள்ளிங்கிரி விஜயுடன் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது விஜய் வைத்திருந்த கத்தியால் குத்தியதாக தெரிகிறது இதில் படுகாயம் அடைந்த வெள்ளிங்கிரி உடுமலை GH-ல் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தளி காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.


