News September 5, 2025
நல்லாசிரியா் விருதுக்கு ஈரோட்டில் 11 ஆசிரியா்கள் தோ்வு

ஈரோடு, தமிழக அரசின் மாநில நல்லாசிரியா் விருதுக்கு ஈரோடு மாவட்டத்தில் 11 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய ஆசிரியா் தினமாக கொண்டாடப்படும் அந்நாளில் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு இன்று (செப்.5) சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மாநில நல்லாசிரியா் விருதை வழங்க உள்ளாா்.
Similar News
News September 7, 2025
ஈரோடு : PHONE காணாமல் போனால் இதை செய்யுங்க!

ஈரோடு மக்களே உங்க Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News September 7, 2025
கோவை ஒபிஸ் ஆதரவாளர்கள் செங்கோட்டையனுக்கு ஆதரவு

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பில் இருந்து விடுவித்தார். அதனை தொடர்ந்து இன்று கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் இல்லத்தில் கோவையை சேர்ந்த ஒபிஸ் அணியினர் மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் 2500கும் மேற்பட்டோர் செங்கோட்டையனை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.மேள தாளங்களுடன் வந்து அவரை சந்தித்தது குறிப்பிடதக்கது.
News September 7, 2025
BREAKING: ஈரோடு அதிமுகவில் அடுத்தடுத்து நீக்கம்!

அதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் முன்னாள் எம்பி சத்தியபாமா, இன்று முதல் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஆதரவாளரான சத்தியபாமா கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.