News March 9, 2025
நல்லம்பள்ளியில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை

நல்லம்பள்ளி அடுத்த, புறவடை பகுதியை சேர்ந்த ஷேர்லின்பெல்மா, (வயது 44) என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். நேற்று பள்ளி முடிந்தபின் மாலை வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பிரோவில் இருந்த 100 பவுன் நகை மற்றும் ரூ.1.50 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து, போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Similar News
News September 10, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செப்.10) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்புஎண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News September 10, 2025
மருத்துவ முகாமின் செயல்பாடுகள் ஆய்வு கூட்டம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பெறப்பட்ட மனுவின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும், இணைய வழி இ-பட்டாக்கள் குறித்தும் மற்றும் “நலம் காக்கும் ஸ்டாலின்” முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாமின் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் இயக்குனர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.
News September 10, 2025
தர்மபுரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரடியாக பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார்.பெறப்பட்ட 57 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, உடனடி தீர்வுகள் வழங்கப்பட்டன. இத்தகைய முகாம்கள் காவல்துறை மற்றும் பொதுமக்களுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துகின்றன.இந்த நடவடிக்கை பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.