News February 25, 2026
நல்லகண்ணுவின் மீசையை கையால் பிடுங்கி சித்ரவதை

தான் சாகும் வரை நல்லகண்ணு மீசை வளர்க்கவில்லை. 1948-ல் CPI தடைசெய்யப்பட்ட போது, தலைமறைவாக இருந்த நல்லகண்ணுவை தீவிரமாக போலீஸ் தேடிவந்தது. சுமார் ஓராண்டு கழித்து நல்லகண்ணு சிக்க, சிறையில் அவரை தலைகீழாக தொங்கவிட்டு மீசையிலிருந்த ஒவ்வொரு முடியையும் கைகளால் பிடுங்கி போலீஸ் சித்ரவதை செய்துள்ளது. அப்போது ’எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் வரை மீசையே வளர்க்கமாட்டேன்’ என நல்லகண்ணு சபதமெடுத்திருந்தார்.
Similar News
News March 1, 2026
FLASH: சிலிண்டர் விலை உயர்ந்தது

சர்வதேச சந்தை நிலவரப்படி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாதந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இன்று முதல், ₹29.50 உயர்ந்து ₹1,929 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் (14.2 கிலோ எடை) விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ₹868.50 ஆக தொடர்கிறது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
News March 1, 2026
மார்ச் 1: வரலாற்றில் இன்று

*பாகுபாடு ஒழிப்பு நாள் *1904–பத்திரிகையாளர் ஆ.நா.சிவராமன் பிறந்தநாள் *1910–தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் *1951–பிஹார் CM நிதிஷ் குமார் பிறந்தநாள் *1953–CM ஸ்டாலின் பிறந்தநாள் *1992–பாடகி சூலமங்கலம் ராஜலட்சுமி நினைவு நாள் *1992-விடுதலை போராட்ட வீராங்கனை கே.பி.ஜானகி அம்மாள் நினைவு நாள் *1995–Yahoo ஆரம்பம் *2014-அரசியல்வாதி பங்காரு லட்சுமண் நினைவு நாள்
News March 1, 2026
திமுகவின் பிரசாரத்தை முறியடிக்க பாஜகவின் திட்டம்

தேர்தலையொட்டி தமிழகத்திற்கு அடுத்தடுத்து மத்திய அமைச்சர்கள் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. TN-ஐ மத்திய அரசு வஞ்சிப்பதாக CM ஸ்டாலின் கூறும் நிலையில், 3 மாவட்டங்களுக்கு தலா ஒரு அமைச்சர் வீதம் அனுப்பி PM வீடு கட்டும் திட்டம் உள்ளிட்டவை குறித்து பயனாளிகளிடம் எடுத்துரைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் மத்திய அரசுக்கு நல்ல பெயர் உண்டாகி, அது வாக்காக மாறும் என கணக்கிடப்பட்டுள்ளது.


