News December 30, 2025

நர்ஸ் பெண்ணை செங்கல்லால் தாக்கி மிரட்டியவர் கைது

image

சென்னை தி.நகர் வசிக்கும் 27 வயது பெண், 2020ல் திருமணமான பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து, தற்போது நர்ஸ் பணியில் உள்ளார். அவருடன் 4 ஆண்டுகளாக பழகி வந்த அன்பு, என்பவர் சில தினங்களாக பேசுவதை தவிர்த்ததால், பெண் 27.12.25 அன்று அப்பெண்ணை செங்கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் R-5 விருகம்பாக்கம் காவல் நிலையம் வழக்கு பதிவு செய்து, அன்பு கைது செய்யப்பட்டார்.

Similar News

News December 30, 2025

சென்னை: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், <>www.tnesevai.tn.gov.in<<>>, என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News December 30, 2025

சென்னை: குடும்பத்தில் 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000

image

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. வருமான சான்றிதழ் போதும், இ-சேவை மையத்தில் அல்லது சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். 9790241737, 044-26426421, 044-025952450 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள்

News December 30, 2025

பெங்கல் பரிசுகளை டோக்கன் மூலம் விநியோகிக்க திட்டம்!

image

2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தலா 22,291 மெட்ரிக் டன் பச்சரிசி, சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1,77,22,000 வேட்டி, 1,77,64,000 சேலை கொள்முதல் செய்யப்பட்டு 85 சதவீதம் ரேஷன் கடைகளுக்கு நகர்ந்துள்ளது. ரொக்கம், கரும்பு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது சென்னை மண்டலத்தில் முதற்கட்டமாக டோக்கன் மூலமாக பரிசு பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.

error: Content is protected !!