News November 9, 2024
நரிப்பள்ளி அரசு பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டம்

தர்மபுரி மாவட்டம் 2023-2024 கல்வி ஆண்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரூர் சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த வாரம் நடைபெற்றன. இந்த போட்டிகளில் நரிப்பள்ளி அரசு மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினர். இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலர் சந்திரா கோப்பைகளையும் பரிசுகளையும் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
Similar News
News September 24, 2025
தருமபுரி அருகே எஸ்எஸ்ஐயை கைது

தர்மபுரி அருகே, கள்ளக்காதலியை கிணற்றில் தள்ளிய எஸ்எஸ்ஐயை கைது செய்யப்பட்டுள்ளார். ஒட்டப்பட்டியை சேர்ந்த கோமதி (28) கணவரின் தொல்லை காரணமாக புகார் அளிக்க சென்றபோது ராஜாராமுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதல் விவரம் ராஜாரம் மனைவிக்கு தெரிந்தால், பரிகாரம் செய்ய வேண்டும் என கூறி கோமதியை கோயிலுக்கு அலைத்து சென்று கிணற்றில் தள்ளி கொல்ல முயன்றுள்ளார். புகாரின் பேரில் ராஜாராமை போலீசார் கைது செய்தனர்.
News September 24, 2025
தருமபுரி அருகே மூதாட்டி சடலமாக மீட்பு

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே சிட்லிங் வனப்பகுதியில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு வாரத்திற்கு முன் வேலூர் மாவட்டம் பாகாயம் போலீஸ் நிலையத்தில் சரணடைந்த விஜயகுமாரை விசாரித்த போது, அவர் தனது உறவினரான வெள்ளச்சி (63) என்ற மூதாட்டியை கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அழுகிய நிலையில் இருந்த மூதாட்டியின் உடல் சிட்லிங் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
News September 24, 2025
தர்மபுரி: மனைவியுடன் தகராறு; உயிரை மாய்த்த Ex.ராணுவ வீரர்

தர்மபுரி குமாரசாமிபேட்டை பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுப்பிரமணி, தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மனைவி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மனம் உடைந்த சுப்பிரமணி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து, தர்மபுரி நகர காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.