News August 14, 2024
“நம்ம மெரினா நம்ம பிரைடு” தலைப்பில் கட்டுரை போட்டி

கடற்கரைகளை குப்பைகள் கொட்டுவதில் இருந்து பாதுகாப்பது, குறித்து “நம்ம மெரினா நம்ம பிரைட்” என்ற தலைப்பில் கட்டுரை போட்டியை சென்னை மாநகராட்சி நடத்தவுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கட்டுரைகள் சென்னை மாநகராட்சியின் சமூக ஊடக தளங்களில் பதிவிடப்படும். இப்போட்டியில், கலந்து கொள்பவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரைப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 8, 2025
சென்னை: ரேஷன் கார்டு இருக்கா? இன்று மிஸ் பண்ண வேண்டாம்!

சென்னையில் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் இன்று (நவ.8) நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் & நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் காலை 10 மணி-பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். ஷேர் பண்ணுங்க.
News November 8, 2025
சென்னை: டாஸ்மாக் அருகே தலை நசுங்கி கிடந்த ஆண் சடலம்

சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் முரளி, (28). இவர் திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் சந்திப்பு டாஸ்மாக் கடை அருகே நேற்று தலை நசுங்கிய நிலையில், இறந்து கிடந்தார். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News November 8, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

சென்னை மாவட்டம் முழுவதும் “Knights on Night Rounds” என்ற திட்டத்தின் கீழ் நேற்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பெருநகர சென்னை காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.


