News July 25, 2024
நத்தம் தொகுதிக்கு விரைவில் அரசு கலைக்கல்லூரி

செம்பட்டி அருகே உள்ள கூட்டுறவு கலை அறிவியல் கல்லூரியில் 2024-2025ஆம் ஆண்டுக்கான வகுப்புகள் தொடக்க விழாவில் பங்கேற்ற ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி பேசியதாவது; தமிழக மாணவர்களில் கல்வித்தரம் உயர்ந்து வருகிறது. மேலும், திண்டுக்கலில் 6 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன.அதனுடன் நத்தம் தொகுதிக்கு புதிய அரசு கல்லூரி கொண்டுவரப்படும் என்றார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உடனிருந்தார்.
Similar News
News March 3, 2026
திண்டுக்கல் கலெக்டர் அதிரடி ஆய்வு!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. திண்டுக்கல் மற்றும் பழநி கல்வி மாவட்டங்களில் 216 பள்ளிகளைச் சேர்ந்த 21,391 மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று நடந்த தமிழ் பாடத் தேர்வை 21,052 மாணவர்கள் எழுதினர்; 339 பேர் வரவில்லை. தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் சரவணன் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் உஷா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
News March 3, 2026
வீடு புகுந்து நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் பேர் கைது!

வேடசந்தூர் அருகே சண்முகம் என்பவரைத் தாக்கி, 5 பவுன் நகையைப் பறித்துச் சென்ற வழக்கில் மேல்மாத்தினிபட்டியை சேர்ந்த கதிர் மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். போலீசார் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட தங்க நகைகள், செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். குற்றவாளிகள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
News March 2, 2026
திண்டுக்கல்: சொந்த தொழில் தொடங்க SUPER வழி!

திண்டுக்கல் மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <


