News December 7, 2024

நத்தம் அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

image

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே நத்தம் சாலையில் உள்ள பேபி குளத்தில் இன்று 3 சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்த நிலையில், கால் இடறி உள்ளே சென்று உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 3 சிறுவர்களின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,

Similar News

News April 7, 2026

திண்டுக்கல்: ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivaha<<>>n என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் அறிய 0120-4925505-ல் அழைக்கலாம். மறக்காம இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

News April 7, 2026

நத்தம் அருகே சோகம்; மகன் கண் முன்னே தாய் பலி!

image

மேலுார்- காடம்பட்டியை சேர்ந்தவர் மாலா(47). இவர் நேற்று தனது மகன் விஜய்குமாருடன்(21) பைக்கில் பின்னால் அமர்ந்து நத்தம்- சிறுகுடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். செந்துறை சாலையில் பைக் சென்று கொண்டிருந்த போது எதிரே ஆவிச்சிபட்டியை சேர்ந்த சொக்கர்(36) என்பவர் ஓட்டி வந்த பைக் அவர்கள் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற மாலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நத்தம் போலீசார் விசாரணை.

News April 7, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 6) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு அந்தந்த உட்கோட்ட அதிகாரிகளை தொலைபேசி வாயிலாகவோ அல்லது 100 என்ற எண்ணையோ அழைத்து தகவல் தெரிவிக்கலாம். மேலும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் பொதுமக்களின் வசதிக்காக வழங்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!