News December 9, 2025
நடிகை வன்கொடுமை வழக்கு: பார்வதி அதிருப்தி

<<18502482>>நடிகை பாலியல் வன்கொடுமை<<>> வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதை, நடிகை பார்வதி காட்டமாக வெளிப்படுத்தியுள்ளார். எது நீதி? கவனமாக உருவாக்கப்பட்ட திரைக்கதை தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது; இதை நாம் கவனித்து கொண்டிருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்ததில் பார்வதியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 12, 2025
₹1,000 பணம் வரவில்லையா? இதை செய்யுங்க!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் விண்ணப்பித்த <<18541396>>17 லட்சம் மகளிருக்கு ₹1,000 வரவு<<>> வைக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கத்தில் சுமார் 28 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில், பணம் கிடைக்காத 11 லட்சம் பேர் உள்ளிட்ட பலரும் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், பணம் வரவில்லை என்றால் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம் என அரசு தெரிவித்துள்ளது.
News December 12, 2025
Pregnancy Test: ஹாஸ்டலில் மாணவிகளுக்கு கொடுமை!

புனே பழங்குடியினர் விடுதியில் நடந்த சம்பவம் பலரையும் அதிரவைத்துள்ளது. விடுதியில் தங்கியிருக்கும் பெண்கள், லீவு முடிந்து வந்தால், கர்ப்ப பரிசோதனை செய்ய விடுதி நிர்வாகிகள் வற்புறுத்தியுள்ளனர். பரிசோதனையை செய்ய மறுத்தால், விடுதிக்குள் அனுமதி மறுக்கப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறும் நிலையில், தற்போதும் இந்நிலை தொடர்வதாக மாணவிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
News December 12, 2025
திருப்பரங்குன்றத்தால் திருப்பம் வரும்: நயினார்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வாக்குவங்கிக்காகவே கோர்ட் தீர்ப்பை திமுக மதிக்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். கருத்து கணிப்புகளில் கூட திமுக ஆட்சி மிகவும் பின் தங்கியுள்ளதாக கூறிய அவர், 2026 தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி தான் வெற்றிபெறும் என்று குறிப்பிட்டார். திருப்பரங்குன்றம் விவகாரத்தால், இந்த ஆட்சிக்கே திருப்பம் வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


