News August 5, 2024
நடமாடும் குழந்தைகளுக்கான இயன் முறை சிகிச்சை வாகனம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடமாடும் குழந்தைகளுக்கான இயன் முறை சிகிச்சை வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் இன்று (ஆக.5) இதனை தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் கதிர்வேல், மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சற்குனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Similar News
News August 13, 2025
செங்கல்பட்டு இரவு ரோந்து காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை இன்று இரவு ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. DSP தலைமையில் அதிகாரிகள் செங்கல்பட்டு, மாமல்லபுரம், மதுராந்தகம் ஆகிய வட்டங்களில் உள்ள ஒன்பது காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து செல்ல உள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
News August 13, 2025
தாம்பரம் இரவு நேர ரோந்து பணி காவலர் விவரம்

தாம்பரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், குறிப்பாக இரவு நேரங்களில் பணிக்கு செல்லும் பெண்கள், காவல் நிலையம் வாரியாக கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அனைவரும் தெரிந்துகொள்ள பகிருங்கள்.
News August 13, 2025
செங்கல்பட்டு: B.Sc,B.C.A,M.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் <